Published : 12 Dec 2020 03:17 AM
Last Updated : 12 Dec 2020 03:17 AM
கடலூர்: பிலிப்பைன்ஸில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலம் இணைந்து உருவாக்கிய புதிய நெல் ரகம் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் உயர்கல்வித் துறை மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ‘ஏயு ஒன்று ஜிஎஸ்ஆர் (AU 1 GSR)’ என்ற புதிய நெல் ரகத்தை வெளியிட, தொழில் துறை அமைச்சர் எம். சி. சம்பத் பெற்றுக் கொண்டார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் முருகேசன், பதிவாளர் முனைவர் இரா.ஞானதேவன் முன்னிலையில் இந்த ரகத்தின் சிறப்பியல்புகளை பல்கலைக்கழக வேளாண் புல முதல்வர் முனைவர் க.மணிவண்ணன் எடுத்துரைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT