Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM
புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
‘புரெவி’ கரையைக் கடக்கும்போது, பெருமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு டிச.4-ம் தேதி (இன்று) அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு ஈடாக 2021 ஜனவரியில் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும். இந்த மாவட்டங்களில் அத்தியாவசியப் பணிகள் தவிர பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT