Published : 27 Nov 2020 07:20 AM
Last Updated : 27 Nov 2020 07:20 AM

300 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில்ஞானவேல்ராஜா மீதான விசாரணைக்கு தடை

மதுரை: ராமநாதபுரத்தில் ரூ.300 கோடி நிதி நிறுவன முறைகேடு வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி வரை முறைகேடு செய்ததாக நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப் பதிந்தனர். இதில் விசாரணைக்கு வருமாறு போலீஸார் எனக்கு அழைப்பாணை அனுப்பினர்.

இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது. இந்த முறைகேட்டில் எனக்குத் தொடர்பில்லை. எனவே, என் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதித்தும், வழக்கிலிருந்து எனது பெயரை நீக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், ஞானவேல்ராஜா மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து மனு தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜன.21-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x