Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

2 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 அணியில் கிறிஸ் கெயில்

இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மூத்த பேட்ஸ்மேனான கிறிஸ் கெயில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிமேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடர் வரும் மார்ச் 3-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான மேற் கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த பேட்ஸ்மேனான கிறிஸ் கெயிலுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

41 வயதான கிறிஸ் கெயில், ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர்களில் சிறப்பாக விளையாடியதால் மீண்டும் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேவேளையில் மூத்த வேகப்பந்து வீச்சாளரான 39 வயதான பிடல் எட்வர்ட்ஸ் 9 ஆண்டுங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.

அதேவேளையில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர்களாக கெவின் சின்க்ளேர், அகில் ஹோசைன் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். டி 20ஆட்டங்கள் வரும் 3, 5 மற்றும்7-ம் தேதிகளில் ஆன்டி குவாவில்உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிகோவா - ஹைதராபாத்

நேரம்: மாலை 5

மும்பை – ஏடிகே மோகன் பகான்

நேரம்: இரவு 7.30

இடம்: கோவாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x