Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ரூ.3.52 லட்சம் பறிமுதல் :

வேடசந்தூரில் சோதனையில் ஈடுபட்ட பறக்கும்படையினர் ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.3.52 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துப்பாலம் அருகே பறக்கும்படையினர் அலுவலர் வஞ்சிமுத்து, தலைமையில் சிறப்பு எஸ்.ஐ., ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாளையத்தில் இருந்து துணிக்கடை உரிமையாளர் காளியப்பன் வந்த காரை சோதனையிட்டதில் ரூ.3.52 லட்சம் ஆவணங்கள் இன்றி கொண்டுசென்றது தெரியவந்தது. முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுசென்றதால் கணக்கில் வராத பணம் என்று கூறி பறக்கும்படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை வேடசந்தூர் வட்டாட்சியரும் உதவி தேர்தல் அலுவலருமான சக்திவேலனிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x