Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

ஆண்டிபட்டி அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கோமாதா பூஜை உள்ளிட்டவை நடந்தன.

இதனையடுத்து பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் விமான கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மூலவர் காளியம்மன், செல்வவிநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x