Published : 14 Feb 2021 03:18 AM
Last Updated : 14 Feb 2021 03:18 AM
கொள்ளிடம் ஆற்றின் மண் அரிப்பைத் தடுக்க
அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினத்தில் தடுப்பணை
முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
கடலூர்
சிதம்பரம் அருகே அக்கரை ஜெயங் கொண்டப்பட்டினத்தில் தடுப்பணை கட்டும் பணியை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, அக்கிராமத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், அடிக்கல் நாட்டினார்.
சிதம்பரம் அருகே உள்ள அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் ரூ.14.74 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள தடுப்பணை கட்டும் பணிகளை சென்னையில் இருந்து கானொலி காட்சி மூலம் நேற்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது, அக்கரை ஜெயங் கொண்ட பட்டினம் கிராமத்தில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அணைக்கரை பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் அருணகிரி, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர்கள் ரமேஷ், முத்துக்குமரன், அதிமுக ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி அன்பழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவி மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT