Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் பிப்.8-ம் தேதி மாலை 4 மணிக்கு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு திமுக மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் அக் கட்சியினர் மாவட்டம் முழுவதும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
சாக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் பள்ளத்தூர், கானாடுகாத்தான் பகுதி களில் மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி தலைமையில் வியாபாரிகள், பொது மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத் தனர். இதில் நகர் செயலாளர்கள் அசோக், கணேசன், முனீஸ் ராமநாதன், மகளிரணி வெள்ளையம்மாள், சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT