Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM
கோவை: விளாங்குறிச்சி பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.6 கோடி மதிப்பிலான மாநகராட்சி நிலம் மீட்கப்பட்டது.
கோவை விளாங்குறிச்சி 32-வது வார்டில் தனியார் லே-அவுட் அமைக்கப்பட்டு, வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டன. அங்கு பூங்கா மற்றும் பொது ஒதுக்கீட்டுக்கான 39 சென்ட் இடத்தை, போலியாக வரைபடம் தயாரித்து வீட்டு மனையாக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த இடத்தை மீட்க வேண்டும் என புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று தொடர்புடைய பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அந்த இடத்தை மீட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.6 கோடி ஆகும். தற்போது அந்த இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT