Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை சேர்ந்த கல்கி சுப்ரமணியம் தலைமையில் திருநங்கைகள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் நேற்று அளித்த மனுவில், “மத்திய, மாநில அரசுகள், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்குகின்றன. உளவியல் மருத்துவர் சான்று வழங்கினால் மட்டுமே இந்த அட்டை வழங்கப்படும். இந்த சான்றை பெற, கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதுள்ளது. பொள்ளாச்சியில் இருக்கும் வயதான திருநங்கைகள், உடல் நலம் பாதித்தோரால் கோவை சென்று சான்று பெற்று வர முடியாத நிலை உள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமைதோறும் உளவியல் மருத்துவர் வருகிறார். எனவே, இங்கேயே உளவியல் சான்று வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT