Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM

கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் போலீஸார் நடனம் :

சென்னை

கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை பெண் போலீஸார் நடனமாடினர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்றுள்ளது.

கரோனா நடன நிகழ்ச்சியை ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸார், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடத்தினர்.

அப்போது, ‘குக்கூ... குக்கூ...’ என்ற பாடலுக்கு இளம்பெண் காவலர்கள் மிக நேர்த்தியாக நடனமாடினர். காக்கி உடையில் முகக்கவசம் அணித்துகொண்டு பெண் போலீஸார் நடனம் ஆட, அவர்களுக்கு பின்னால் கறுப்பு உடையில் மற்றொரு பெண் காவலர் முகக்கவசம் அணியாமல் நடனத்தில் இணைந்தார். அவர் கரோனா பிடியில் சிக்குவதுபோல தத்ரூபமாக நடனம் ஆடினார்.

இந்த நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x