Published : 10 May 2021 06:24 AM
Last Updated : 10 May 2021 06:24 AM
தொப்பூர் அருகே தேசிய நெடுஞ் சாலையில் நடந்த விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் இடையர்பாளையம் ஜெஜெ நகர் நேரு வீதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சதீஷ்குமார் (28). சேலம் மாவட்டம் சின்னப்பம் பட்டி அடுத்த முனியம்பட்டி காட்டுவளவு பழனிசாமி மகன் ரமேஷ் (29). பொறியியல் பட்ட தாரிகளான இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், இவர்கள் இருவரும் நேற்று இருசக்கர வாகனத்தில் பெங்களூருவில் இருந்து தங்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம் தொம்பரகாம்பட்டி அருகே அய்யனாரப்பன் கோயில் பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக லாரியின் பின் சக்கரத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே சதீஷ்குமார் மற்றும் ரமேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக தொப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கன்டெய்னர் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT