Published : 06 Mar 2021 03:15 AM
Last Updated : 06 Mar 2021 03:15 AM
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரம் 6 நாட்களும் முழு நேரம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுப்பியுள்ள உத்தரவில், ‘‘புதுச்சேரி, காரைக்காலில் இன்று அரை நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். மதிய உணவு வழங்கப்படாது. திங்கள்கிழமை முதல் வழக்கம்போல மதிய உணவு தரப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதிய உணவு வழங்கும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டிருப்பதால் மதிய உணவு இன்று மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT