Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM

நீடாமங்கலம்- மன்னார்குடி இடையே - புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு :

திருவாருர்

மன்னார்குடி- நீடாமங்கலம் இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்- மன்னார்குடி இடையே 13.4 கி.மீ ரயில் இருப்புப் பாதையை மின்மயமாக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தன. ரூ.10 கோடி மதிப்பீட்டிலான இந்தப் பணிகள் நிறைவுற்ற நிலையில், தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஏ.கே.ராய் தலைமையிலான அதிகாரிகள் மின்மயமாக்கப்பட்ட பாதையை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வரை எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின்களை இயக்கி சோதனை செய்தனர்.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, மன்னார்குடியிலிருந்து சென்னை வரை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் செல்லும் பகத் கீ கோதி எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பதி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை மின்சார இன்ஜின்கள் மூலம் விரைவில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x