Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM
காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே பி.கே.சாலையில் சிறப்பு அதிரடிப்படை பிரிவு காவல் உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் தமிழகத்துக்கு மதுபாட்டில்களை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மதுபாட்டில்களை கடத்தி வந்த சீர்காழி கன்னியப்பன்(32), வெள்ளப்பன்(34) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல, திருநள்ளாறு அருகே அம்பகரத்தூரில் காவல் ஆய்வாளர் லெனின்பாரதி தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை கடத்திச் சென்ற நன்னிலம் தமிழரசன்(32), ராமதாஸ்(36) ஆகியோரை கைது செய்து, ரூ.4,000 மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT