Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM

ரயில் நிலைய குட்ஷெட் முன்பு லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் :

கும்பகோணம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு லாரிகளில் கொண்டுவரப்பட்டு, வெளியூருக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதற்காக, 200-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குறிப்பிட்ட 20 லாரிகளுக்கு மட்டுமே நெல் மூட்டைகளைக் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் டோக்கன் வழங்கி வருவதாகக் கூறி, அதைக் கண்டித்தும், அனைத்து லாரிகளையும் இயக்க டோக்கன் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் குட்ஷெட் முன்பு லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x