Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்

விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிவடைந்த நிலையில் உள்ள நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விரும்பும் முன்னாள் விளையாட்டு வீரர் களுக்கு, 1.4.2021 அன்று 58 வயது பூர்த்தியடைந்திருப்பதுடன், மாத வருமானம் ரூ.6 ஆயிரத் துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் மற்றும் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறுபவர்கள், இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை. இந்த உதவித்தொகையை பெற www.sdat.tn.gov.in என்ற இணை யதளம் மூலம் மட்டுமே விண் ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி மார்ச் 19. மேலும் விவரங் களுக்கு, நாகை மாவட்ட விளை யாட்டு அலுவலகத்தை 04365 253059, 7401703497 ஆகிய எண்களில் தொடர்புகொள் ளலாம் என ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x