Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில், நிகழாண்டு மாசி மக விழா கடந்த பிப்.17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், நேற்று காலை 6 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, வடம்பிடித்து தேர் இழுத்தனர். இன்று(பிப்.25) காலை சுவாமி, அம்மன் தேரோட்டமும், மாலை சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெறவுள்ளன.

நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில்...

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, தேவி, பூதேவியாருடன் நித்ய கல்யாணப் பெருமாள் தேரில் எழுந்தருளினார். பின்னர், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தின் நிறைவாக, காரைக்கால் அம்மையார் கோயில் குளத்தில்(சந்திர புஷ்கரணியில்) நித்யகல்யாணப் பெருமாள் தீர்த்தவாரி நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x