Published : 05 Feb 2021 03:18 AM
Last Updated : 05 Feb 2021 03:18 AM

புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் புதிதாக 36 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக8 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,760-ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,623-ஆகஅதிகரித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 7,586-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x