Published : 23 Jan 2021 03:17 AM
Last Updated : 23 Jan 2021 03:17 AM

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் சார்பில் கும்பகோணத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

இதில் மாநிலச் செயலாளர் பாலா, மாவட்ட இளைஞரணித் தலைவர் விஜய், சிவசேனா மாவட்ட பொதுச் செயலாளர் குட்டி சிவகுமார், விஸ்வ இந்து பரிஷத் நகரத் தலைவர் கண்ணன், ராம் சேனா மாவட்டத் தலைவர் ஜெயபால், இந்து முன்னணி முன்னாள் நகரத் தலைவர் ஆர்.ஜி.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், அதற்கான கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x