Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

வடலூரில் தொழில் முனைவோர் பயிற்சி

இந்திய அரசு குறு, சிறு, நடுத்தர தொழில் அமைச்சகத்தின் எம்எஸ்எம்இ மதுரை விரிவாக்க மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய அரசின் குறு சிறு நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (பிபிடிசி) சார்பில் வரும் 9-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தொழில் முனைவோர் பயிற்சி (EDP) வாஷ் தொண்டு நிறுவனம், எண். 103, வாகீசன்பிள்ளை நகர், காட்டு கூடலூர் ரோடு, வடலூர் என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பற்றிய விவரங்கள், சந்தை வாய்ப்புகள், மானியத்துடன் கூடிய நிதி உதவிகள், தொழில் நிர்வாகம் குறித்தும் மத்திய, மாநில, அரசு அதிகாரிகள் உரையாற்றுகின்றனர். 18 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 30 பேர் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பயிற்சியின் இறுதியில் மத்திய அரசின் சான்றிதழ் அளிக்கப்படும். விருப்பமுள் ளவர்கள் 9600626913, 8667065048 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x