Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM
தீபாவளி பண்டிகையை முன் னிட்டு கும்பகோணம் நகரில் இன்று(நவ.6) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறியிருப்பதாவது:
கும்பகோணம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்ப தால், தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் நவ.6(இன்று) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, தஞ்சாவூர் வழித்தடத்திலிருந்து கும்பகோணத் துக்கு வரும் பேருந்துகள் தாராசுரம் புறவழிச்சாலை வழியாக செட்டிமண்டபம், நால்ரோடு வழியாக பேருந்து நிலையத்துக்கு வர வேண்டும். பேருந்து நிலையத் திலிருந்து தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் மகாமக குளம், காந்தியடிகள் சாலை, ஏஆர்ஆர் வளைவு வழியாக செல்ல வேண்டும்.
சுவாமிமலை வழித்தடத்தில் சென்று வரும் பேருந்துகள் ரயில் நிலையம், நால்ரோடு, செட்டிமண்டபம் வழியாக சென்று, வர வேண்டும்.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கும்பகோணம் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே 24 மணி நேரமும் செயல்படும் வகையில், தற்காலிக காவல் கட்டுப்பாட்டு மையம் செயல்பட உள்ளது. மேலும், உச்சிப் பிள்ளையார் கோயில் சந்திப்பு, பாலக்கரை, மேம்பாலம் ஆகிய 3 இடங்களில் உயர் கோபுர காவல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
பொதுமக்கள் கூட்டமான நேரத்தில் பொருட்களை வாங்குவதை தவிர்த்து கரோனா விழிப்புணர்வு முன்னெச்சரிக்கையு டன் நடந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT