Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM
தஞ்சாவூர்/ அரியலூர்: வெங்காய விலையைக் குறைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வெங்காய மாலை அணிந்தும், கையில் காய்கறித் தட்டுகளை ஏந்தியும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, மாநகரச் செயலாளர் இ.வசந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வெங்காயம், உருளைக்கிழங்கு, எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக் கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி யுள்ளனர். எனவே, இந்தப் பொருட்களின் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடைகளில் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன.
இதேபோல அரியலூர் பேருந்து நிலையம் அருகே அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத் தின் ஒன்றியத் தலைவர் மலர்க்கொடி தலைமை வகித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT