Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM

படகு கவிழ்ந்து மீனவர் மாயம்

குமரி மாவட்டம் தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் கடலுக்குள் மணல் திட்டுகள் காணப்படுவதால், இங்கு கடந்த ஐந்து மாதங்களில் படகுகள் கவிழ்ந்து 4 மீனவர் கள் உயிரிழந்துள்ளனர்.

மணல் திட்டுகளை அகற்றக்கோரி மீனவ கிராமங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பூத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெரின்(31) என்பவருக்கு சொந்தமான படகில், அவருடன் சேர்த்து 6 மீனவர்கள் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கப் புறப் பட்டனர்.

அப்போது, படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 5 மீனவர்கள் நீந்தி கரைசேர்ந்தனர். பெரின் மாயமானார். அவரை சக மீனவர்கள் 43 படகுகளில் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x