Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM

குமரி ஆலய ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சுசீந்திரத்தில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன், குமரி ஆலய ஊழியர்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1997, 2008, 2019 அரசு ஆணைப்படி ஊதியம் நிர்ணயம் செய்து சம்பள உயர்வு வழங்க வேண்டும், அரசு ஆணைப்படி பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி முறைகேடுகளை சீர்செய்து, ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு உடனுக்குடன் பிஎப் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி மறுக்கப்பட்டு 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத பெண் ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்பி பெல்லார்மின், ஆலய ஊழியர் சங்கச் செயலாளர் அஜிகுமார், முன்னாள் செயலாளர் சிவசங்கரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் தங்கமோகன், மீன் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி, தோட்ட தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் வல்சகுமார் ஆகியோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x