Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM
கோவில்பட்டி: தூத்துக்குடியில் புரோட்டா கடை உரிமையாளர் கொலை தொடர்பாக நேற்று கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு இளைஞர் சரணடைந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள ஆ.சண்முகபுரத்தை சேர்ந்த வேல்ராஜ் மகன் வாழ்வாங்கி(28). இவர் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் சாலையில் புரோட்டா கடை நடத்தி வந்தார். கடந்த 31-ம் தேதி இரவு ஒரு கும்பல் வாழ்வாங்கியை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது. கொலையில் தொடர்புடையவர்களை வடபாகம் போலீஸார் தேடி வருகின்றனர். கொலையில் தொடர்புடைய தூத்துக்குடி சிலுவைபட்டியை சேர்ந்த ஆனந்த் என்பவர் நேற்று முன்தினம் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இந்நிலையில் கொலை தொடர்பாக நேற்று ஆரோக்கியபுரத்தை சேர்ந்த விஜி மகன் அந்தோணி வினோத் (26) என்பவர் கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் சரணடைந்தார். நவ.11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அவரை பேரூரணி கிளைச் சிறையில் அடைக்கவும், 11-ம் தேதி தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT