Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய முப்படை வீரர் வாரியம் மூலம் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை நிதியில் இருந்து வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற 2019-2020-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புப் பயின்ற முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இணையதளத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது நவம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி, முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT