Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM
தேங்காய்பட்டினம் துறைமுகத்தை மீனவர்களுக்கு பாதுகாப்பு வசதிகளுடன் சீரமைக்க வலியுறுத்தி, சின்னத்துறையில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக துவாரம் மற்றும் உட்பகுதியை ஆழப்படுத்த வேண்டும். அங்கு, மணல் அள்ளும் இயந்திரம்நிரந்தரமாக அமைக்க வேண்டும். துறைமுக துவாரத்தில் படகுகள்தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். அனைத்து விசைப்படகுகளுக்கும் நாட்டுப்படகுகளுக்கும் மண்ணெண்ணெய் டீசல் மானியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.
சின்னத்துறை, இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம்துறை, நீரோடி ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று கடலுக்குச் செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக மீனவர்கள் தெரிவித்தனர். தூத்தூர் மண்டல மறைவட்ட முதன்மைகுரு ஜோசப் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
போராட்டத்தில் மீனவர்கள், மீனவ குடும்பத்தினர் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT