Published : 01 Dec 2021 06:39 AM
Last Updated : 01 Dec 2021 06:39 AM

தூய்மை பணியாளர் உட்பட 2 பேர் மர்ம சாவு :

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பெரியதம்பி(70). இவர் நேற்று காலை தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இது குறித்து சாணார்பட்டி போலீஸார் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே வீரபுடையான்பட்டியைச் சேர்ந்த விவசாயி சின்னக்காளை(48). இவர் வீரபுடையான்பட்டி அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து கன்னிவாடி போலீஸார் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x