Published : 26 Sep 2021 03:26 AM
Last Updated : 26 Sep 2021 03:26 AM

உள்ளாட்சி இடைத்தேர்தலில் குமரியில் 31 பேர் போட்டி :

கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம் ஊராட்சி தலைவர் பதவி மற்றும் 9 ஊராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் நடைபெறு கிறது.

இதில், 31 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் யாரும் மனுக்களை திரும்ப பெறவில்லை. இதனால், இறுதி வேட்பாளர் பட்டியலின்படி 31 பேர் போட்டியிடுகின்றனர். முட்டம் ஊராட்சி தலைவர் பொறுப்புக்கு 5 பேர் போட்டியிடுகின்றனர். சூழால் மற்றும் வெள்ளாங்கோடு ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா 5 பேரும், மகாராஜபுரம், ஆத்திவிளை, குமரன்குடி ஆகிய ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா 4 பேரும், லீபுரம், திக்கணங்கோடு ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா 3 பேரும், பறக்கை வார்டு உறுப்பினருக்கு 2 பேரும் போட்டியிடுகின்றனர். வெள்ளிச்சந்தை வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x