Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

விருத்தாசலம் அருகே : பெண்ணிடம் செயின் பறிப்பு :

விருத்தாசலத்தை அடுத்த பரவளூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ் ணன் என்பவர் தனது மனைவி சரிதாவுடன் (35) வீட்டில் நேற்று முன்தினம் உறங்கியுள்ளார். நேற்று அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த சரிதா கூச்சலிடவே வீட்டிலிருந்தவர்கள் விழித்தனர். அப்போது, தனது 10 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் செல்வதாக சரிதா கூறினார்.இதைத் தொடர்ந்து, வீட்டிலிருந் தவர்கள் பின்பக்க வழியாக தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்கமுயற்சித்தும் அவர்கள் தப்பியோ டியுள்ளனர். மர்மநபர்கள் வீட்டினுள் நுழைந்து பீரோ உள்ளிட்டவைகளை திறந்து பார்த்துள்ளனர். அங்கு ஏதும் கிடைக்காதநிலையில் சரிதாவின் கழுத்திலி ருந்த செயினை பறித்துச் சென் றது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x