Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

ரேஷன் அரிசி பறிமுதல் :

கோவில்பட்டி பூரணம்மாள் காலனியில் உள்ள அரிசி அரவை ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீஸார் அரவை ஆலையில் சோதனை நடத்தினர். அங்கு 27 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 27 மூட்டைகளில் ரேஷன் அரிசி அரைக்கப்பட்டு மாவாக வைக்கப்பட்டிருந்தது. அரவை ஆலையை நடத்தி வரும் வள்ளுவர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த சிவா(24) என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x