Published : 09 Aug 2021 03:18 AM
Last Updated : 09 Aug 2021 03:18 AM

பசுவந்தனை அருகே பரிதாபம் - குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் மரணம் :

கோவில்பட்டி

பசுவந்தனை அருகே குளத்தில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

பசுவந்தனை அருகே உள்ள குதிரைகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் சரவணபாரதி(21). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி(25). இவர்கள் உள்ளிட்ட சிலர் நேற்று காலை தங்களுக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு விடச் சென்றனர். ஊருக்கு வடக்குப்புறம் உள்ள பகுதியில் ஆடுகளை விட்டிருந்தனர். சரவணபாரதி, தனக்கு சொந்தமான ஆடுகளுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக அங்குள்ள குளத்துக்கு அழைத்துச்சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் குளத்துக்குள் விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் சத்தம்போட்டார். விரைந்து வந்த மாடசாமி, அவரை காப்பாற்றுவதற்காக குளத்துக்குள் குதித்தார். ஆனால், இருவரும் குளத்து நீரில் மூழ்கினர். கிராம மக்கள் குளத்துக்குள் இருவரையும் தேடினர். சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் சரவணபாரதி, மாடசாமி ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன. பசுவந்தனை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x