Published : 04 Aug 2021 03:22 AM
Last Updated : 04 Aug 2021 03:22 AM

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் இருவருக்கு விஏஓ பணி ஆணை :

இந்திய ராணுவத்தில் பணியின்போது உயிரிழந்த குமரி மாவட்டத்தை சேர்ந்த இருவரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வழங்கினார்.

கல்குளம் வட்டத்தை சேர்ந்த உமாநாத் என்பவரின் மகள் ரம்யாவுக்கு திருவட்டாறு வட்டம் பேச்சிப்பாறை கிராம அலுவலகத்திலும், விளவங்கோடு வட்டம் முள்ளஞ்சேரியை சேர்ந்த பிரபு என்பவரின் சகோதரர் தமிழரசன் என்பவருக்கு விளவங்கோடு வட்டம் அண்டுகோடு கிராம அலுவலகத்திலும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x