Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

ஏரியில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழப்பு :

அரக்கோணம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவன், சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த என்.எம்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கிஷோர் (10) மற்றும் மகள் சத்யா (13), விநாயகம் என்பவரின் மகள் ஆனந்தி (11) ஆகியோர் அருகே உள்ள பெருங்களத்தூர் ஏரியில் தேங்கியுள்ள குட்டை பகுதியில் நேற்று மாலை குளிக்கச் சென்றனர். அப்போது, நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கிய கிஷோர், ஆனந்தி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சத்யா மட்டும் உயிர் தப்பினார். இருவரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து அரக்கோணம் கிராமிய காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x