Published : 22 Jun 2021 03:13 AM
Last Updated : 22 Jun 2021 03:13 AM
கரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பிற கடைகள் வழக்கத்தைவிட அதிக அளவில் திறந்திருந்தன.
குமரியில் தினசரி கரோனா பாதிப்பு நேற்று 108 பேராக குறைந்திருந்த நிலையில் 4 பேர் மரணமடைந்திருந்தனர். அதே நேரம் ஊரடங்கு கூடுதல் தளர்வுகளால் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிற தேவைகளுக்காக அதிகளவில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இயங்கின.
ஊரடங்கு போன்று தெரியாத வகையில் சாலைகள், பொதுஇடங்களில் பரபரப்பாக காணப்பட்டது.
கடைகள் மற்றும் பொது இடங்களில் மக்கள் சமூக இடை வெளியின்றி கூடுவது நேற்று அதிகரித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT