Published : 06 Jun 2021 03:13 AM
Last Updated : 06 Jun 2021 03:13 AM

மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு : கஞ்சா விநியோகித்த காவலர் மீது வழக்கு :

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (35). மதுரையில் 6-வது பட்டாலியன் காவலராக உள்ளார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சிறையில் பாதுகாப்பு பணிக்காகச் சென்றபோது, விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதியில் தங்கத்துரை (40), யோகலெட்சுமணன் (34), ஆஷா என்ற நாகமுருகன் (34) ஆகிய 3 பேருக்கும் கஞ்சா விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிடைத்த ரகசியத் தகவலின்படி ஜெயிலர் வசந்த கண்ணன் விசாரணை நடத்தினார். இதையடுத்து, ஜெயிலர் அளித்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து காவலர் சுந்தரைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x