Published : 31 May 2021 03:14 AM
Last Updated : 31 May 2021 03:14 AM

புதிதாக 1,690 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,690 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 376 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினத்தை காட்டிலும் நேற்று கரோனா பாதிப்பு சற்று அதிகரித்து காணப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 424 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,189 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 350 பேருக்கு தொற்று உறுதியானது. 4,962 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தி.மலை

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 540 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,836-ஆக உயர்ந்துள்ளது. 32,671 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 7,754 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x