Published : 15 May 2021 03:13 AM
Last Updated : 15 May 2021 03:13 AM

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1200 கனஅடியாக உயர்வு :

தருமபுரி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த 13-ம் தேதி விநாடிக்கு 400 கன அடி என்ற அளவில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. காவிரியாறு அமைந்துள்ள வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழை எதிரொலியாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து சற்றே அதிகரித்துள்ளது. நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 1200 கன அடி என்ற அளவில் ஒகேனக்கல்லில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x