Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு :

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையை அடுத்துள்ள பைங்குளம் பானகுடிவிளையை சேர்ந்த தங்கப்பன் மகன் சாஜன் (23). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (24).

பொறியியல் பட்டதாரியான இருவரும் கூட்டாலுமூட்டில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவில் இவர்கள் பைங்குளத்திலிருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தாணக்குடிவிளை என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த வேன் மோதியது.

இதில் பைக்கை ஓட்டி வந்த சாஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த ராஜேஷை மார்த்தாண்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். புதுக்கடை போலீஸார் விபத்துக்கு காரணமான தூத்தூரை சேர்ந்த வேன் ஓட்டுநர் ஹெல்லித்தை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x