Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் இயங்கி வரும் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) த.ராதாகிருஷ்ணன், திருமானூர் வட்டார வேளாண்மை அலுவலர் க.சேகர் ஆகியோர் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கடைகளில் இருப்பில் வைத்துள்ள பழைய உரங்களை, தற்போது அரசு அறிவித்துள்ள புதிய விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. மேலும், விவசாயிகள் உரம் வாங்கினால் அவர்களின் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்து கொண்டு உரங்களை வழங்க வேண்டும். விவசாயிகள் அனைவருக்கும் ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT