Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

50% இருக்கைகளுடன் பார்கள் செயல்பட ஆட்சியர் உத்தரவு :

வேலூர் மாவட்டத்தில் உள்ள பார்கள் இரவு 9 மணி வரை 50 சதவீதம் இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளித்துமாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை யொட்டி அமைந்துள்ள பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்துள்ள உணவகங்களில் உள்ள பார்கள் அனைத்தும் வரும் 30-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இரவு 9 மணி வரை 50 சதவீதம் இருக்கைகளுடன் செயல்பட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை களில் கட்டாயமாக மூடப்பட்டி ருக்க வேண்டும். அன்றைய தினம் மதுக்கூடங்களில் மது விற்பனை நடைபெற்றால் மதுக்கூடங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x