Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு :

குன்றத்தூர்

`இந்து தமிழ்' நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து காஞ்சி மாவட்ட ஆட்சியர் குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தேர்தல் காலம் என்பதால் அனைத்து துறை அரசு அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமான பணிகளுடன் சேர்த்து தேர்தல் பணியும் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், அரசுத் துறை அலுவலர்கள் தேர்தல் பணியை மட்டும் கவனிக்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக வருவாய்த் துறையினர் வேறு எந்த பணியும் செய்வதில்லை தேர்தல் பணியை மட்டுமே மேற்கொள்கின்றனர். இதனால் பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து இதுகுறித்த விரிவான செய்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 21) `இந்து தமிழ்' நாளிதழில் வெளியானது.

இந்நிலையில், காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ``தேர்தல் பணி என்று வழக்கமான பணியை கவனிக்காமல் இருக்கக் கூடாது. கணினி மூலம் செய்ய வேண்டிய பணிகளை உடனடியாக செய்ய வேண்டும். மற்ற பணிகள் எதுவும் இருந்தால் கால அவகாசம் குறித்து பொது மக்களிடம் தெரிவிக்க வேண்டும். மக்களை தேவையில்லாமல் அலையவிடக் கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x