Published : 05 Mar 2021 03:18 AM
Last Updated : 05 Mar 2021 03:18 AM
கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் கரோனா தடுப்பூசிவிழிப்புணர்வு முகாம் நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். துணை இயக்குநரின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா பேசும்போது, “ பொதுமக்கள் அச்சமின்றி கரோனா தடுப்பூசி போட்டு, வைரஸ் பரவுதலை தடுக்க முன்வர வேண்டும். தடுப்பூசியால் எவ்வித பாதிப்பும் கிடையாது. முதல்முறை தடுப்பூசி போட்டு 28 நாட்களுக்கு பிறகு மறுமுறை தடுப்பூசி போட வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT