Published : 03 Mar 2021 03:25 AM
Last Updated : 03 Mar 2021 03:25 AM

தருமபுரி தொகுதியில் புகார் அளிக்க எண்கள் வெளியீடு

தருமபுரி

தமிழக சட்டப் பேரவை தேர்தலை ஒட்டி தருமபுரி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த அலுவலகத் தில் கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்க விரும்புவோர், தேர்தல் நடத்தும் அலுவலரை 94450 00428 என்ற செல்போன் எண்ணிலும், கட்டுப்பாட்டு அறையை 04342-260038 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், 90038 33329 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் பயன்படுத்தலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x