Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM

பரமக்குடி அருகே வேந்தோணியில் காமாட்சி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா

பரமக்குடி அருகே காமாட்சி அம்மன் கோயில் வருடாபி ஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி கிராமத்தில் காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மஹா கும்பாபிஷேகம் 2011-ம் ஆண்டு நடைபெற்றது. இங்கு 10-ம் ஆண்டு வருடாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.

முன்னதாக விநாயகர் பூஜை, கும்ப ஸ்தாபனம், மஹா ஹோமம், மஹா பூர்ணா ஹூதி, யாத்திராதானம், கும்பம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடை பெற்றன. 11.30 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம், கலச அபிஷேகம், விசேஷ தீபா ராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றன.

வருடாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடு களை கோயில் அறக்கட்டளைத் தலைவர் எஸ்.பி.சுப்பிரமணி யன், கோயில் நிர்வாகத் தலை வர் ரா.பாஸ்கரபாண்டியன், செயலாளர் ஆர்.கருணாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x