Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM

குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

உடுமலை தளி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர்களுக்கான குடியிருப்பில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை குழாய் உடைந்து கழிவு நீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி நகராட்சி அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து நேற்று முன்தினம் உடுமலை- தளி சாலையில் மறியலில் மக்கள் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கழிவுநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றும் பணியில் நேற்று பணியாளர்கள் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x