Published : 09 Jan 2021 03:11 AM
Last Updated : 09 Jan 2021 03:11 AM

காரைக்காலில் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி

காரைக்கால்: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, காரைக்காலில் உள்ள திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது, திரையரங்க வளாகத்தை அடிக்கடி தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட உள்துறை அமைச்சகத்தின் கரோனா தடுப்பு வழிமுறைகள் அனைத்தையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மீறும்பட்சத்தில் உரிய விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். திரையரங்குளில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை, காரைக்கால் நகராட்சி ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும் என காரைக்கால் ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x