Published : 09 Jan 2021 03:11 AM
Last Updated : 09 Jan 2021 03:11 AM

விலையில்லா கால்நடைகள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்வதில் முறைகேடு நாகை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் குற்றச்சாட்டு

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் விலையில்லா கால்நடைகள் வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக மாவட்ட ஊராட்சித் தலைவர் குற்றம்சாட்டி உள்ளார்.

நாகை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் உறுப் பினர் கணேசன் பேசியபோது, “நாகை அருகே பழைய கல் லார், வேளாங்கண்ணி அருகே பரவையிலுள்ள சந்தை ஆகிய 2 இடங்களிலும் சோலார் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும்” என்றார்.

உறுப்பினர் சோழன் பேசிய போது, “கஜா புயலின் காரணமாக சேதமடைந்த சவுக்கு மற்றும் பணப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க, கணக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால், இதுவரை நிவா ரணம் வந்து சேரவில்லை” என்றார்.

பின்னர், மாவட்ட ஊராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி பேசி யது: நாகையில் இருந்து மங்கநல்லூர் செல்லும் சாலையில் பள்ளிக் கூடம், கோயில்கள் உள்ளதால், அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையிடம் தெரி வித்து ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால், இன்னும் வேகத் தடை அமைக்கவில்லை. விலை யில்லாமல் வழங்கப்படும் கால் நடைகளை பெறும் பயனாளிகளை தேர்வு செய்வதில் முறைகேடு நடைபெறுகிறது. சில நேரங்களில் பயனாளிகளுக்கு கால்நடைகளை வழங்காமல் பணம் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகை மாவட்டத்தில் அறுவடை தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. எனவே, விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, மழையால் சேதமடையாமல் பாதுகாக்க நுகர்பொருள் வாணிபக் கழகம் தகுந்த முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x