Published : 09 Jan 2021 03:12 AM
Last Updated : 09 Jan 2021 03:12 AM

சுய தொழில் தொடங்க 27 பேருக்கு கடனுதவி

திருவண்ணாமலை: தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், கரோனா சிறப்பு நிதி உதவி மூலம் சுய தொழில் தொடங்க 27 பேருக்கு ரூ.26 லட்சம் நிதி உதவியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு, துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், தெள்ளார் மற்றும் வந்தவாசி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங் களுக்கு உட் பட்ட 308 ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் மற்றும் தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டம் சார்பில் சுயதொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அழகு கலை, தையல், பேப்பர் கவர் உற்பத்தி, செல்போன் பழுது பார்த் தல், கவரிங் நகை உற்பத்தி செய்ய கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலமாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 27 பேருக்கு ரூ.26 லட்சம் கடனுதவி மற்றும் தெள்ளார் வட்டாரத்தில் இயங்கி வரும் தெள்ளார் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்துக்கு மூலதன மானிய நிதியாக ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.36 லட்சத்தை, தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார். அப்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) அஜீதாபேகம் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x